Friday, November 25, 2011

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?


பெண் சுதந்திரம்..பெண் சுதந்திரம்..பெண் சுதந்திரம்.. இன்னும் இந்த குரல் ஒலித்து கொண்டுதான் இருக்கிறது..

ஆண் வர்கத்து அடிமைகள் சார்பாக இதை சமர்ப்பிக்கிறேன் !

குறிப்பு : இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.. இது போன்று இருக்கும் அனைவரையும் திருத்தி ஆண் சமுதாயத்திற்கு பாடுபட செய்வதே இதன் நோக்கம் !!!



நேர்காணலில்..

பெண்ணிடம் : நைட் ஷிப்ட் எல்லாம் வரணுமே உங்களால முடியுமா ?

ஆணிடம்  : கண்டிப்பா நாலு மாசம் நைட் ஷிப்ட் வரணும் !


வேலையில் சேர்ந்த முதல் நாளில்..

பெண்ணிடம் : ஓகே.. முதல் ரெண்டு நாள் டிரைனிங் நான் எடுக்கறேன்.. அப்புறம் டீம் கூட போய் உக்காருங்க

ஆணிடம்  : ஓகே.. நீங்க அவரோட உக்காருங்க .. கவனமா கேட்டுகொங்க... எதாவது சந்தேகம்னா என்கிட்டே கேளுங்க !


ஆறு மாத முடிவில்..

பெண்ணிடம் : ஆறே மாசத்துல நல்ல பிக்கப் பண்ணிட்டிங்க.. வெரி குட்.. இதையே கன்டிநிவ் பண்ணுங்க

ஆணிடம்  : ஆறு மாசம்ன்றது கம்மியான டைம் உங்கள பத்தி கமென்ட் பண்ண.. இதுவரைக்கும் நல்லா  பன்னிருக்கிங்க..இன்னும் நல்லா பண்ண ஸ்கோப் இருக்கு


எட்டு மாதங்களுக்குப் பிறகு..

பெண்ணிடம் : மீன் குழம்பு பிரமாதம்.. இனிமேல் எடுத்துட்டு வந்தா கட்டாயம் சொல்லுங்க

ஆணிடம்  : நீங்க ரொம்ப நேரமா சீட்ல இல்லையே.. சாப்புட போயிட்டு வர இவ்வளோ நேரமா ?


வேலையில் பெரிய தவறொன்று நடக்கும் சமயம்..

பெண்ணிடம் : அடடா.. இத நம்ம பாத்துருக்கணும்..சரி இனிமேல் கவனமா இருங்க

ஆணிடம்  : என்னங்க.. பத்து மாசம் ஆச்சு..இதெல்லாம் நிச்சயம் பாத்துருக்கணும் ..."பச்"


(தற்போதைக்கு இது போதும் என்று கருதி முடித்துக்கொள்கிறேன்...)

குறிப்பு 1) : மேற்ச்சொன்னவை அனைத்தும் கலரான பிகர்களுக்கு மட்டுமே பொருந்தும்.. மற்ற பெண்கள் வழக்கம் போல் சுதந்திர முழக்கம் எழுப்பலாம்..அதில் ஓரளவு நியாயம் இருக்கிறது.
   
குறிப்பு 2) : ஒரு வேளை அதிகாரி பெண்ணாக இருந்தால் "பெண்" கமெண்ட்ஸ் "ஆணுக்கும்", "ஆண்" கமெண்ட்ஸ் "பெண்ணுக்கும்" பொருந்துமா என்று எனக்கு தெரியவில்லை !!

No comments:

Post a Comment