"சாமி.. எங்க அப்பா எப்பவும் தாடி வளர்த்து இருக்கணும்"..

குழந்தையின் வேண்டுதல் புரியவில்லை பெற்றவனுக்கு..
"ஏம்மா"
"தாடி வெச்சா தான் நீங்க வீட்டுக்கு சீக்கிரம் வரிங்க.. என் கூட விளையாடுரிங்க.. அம்மாவ அடிக்காம இருக்கீங்க"
தூரத்தில் ஐயப்பன் ஏளனமாய் சிரித்துக்கொண்டிருந்தார்!
No comments:
Post a Comment