Friday, November 25, 2011

மயக்கம்!


நண்பனின் நச்சரிப்பை தாங்க முடியாமல் சென்றடைந்தேன்!

ஊரின் மிக  பிரம்மாண்டமான அரங்கம்

ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட இருக்கைகள்...

அதையும் தாண்டி நின்றிருந்தது மக்கள் கூட்டம்...

திரும்பிய திசையெல்லாம் வெள்ளை சீருடையில் இளம் வயது பெண்கள்

பெயருக்கு சில வாலிபர்கள்... அதில் என் நண்பனும் ஒருவன்!!

அத்தனை பேர் இருப்பதற்கான சுவடே இல்லாமல் ஒரு மயான அமைதி...

சட்டென்று ஒரு மனம் வருடும் மெல்லிய இசை ...

வெள்ளை நிற உடையில் ஒரு உருவம் மேடையில் தெரிய அனைவரிடமும் ஒரு ஆவல் ...

ஒரு மணி நேரம்.. நுனி நாக்கு ஆங்கிலத்தில்..

எங்கோ கேட்டவை போலிருந்தது..இருப்பினும் கை தட்டினேன்.. ஆங்கிலத்திற்கு!

பேருந்தில் அமர்ந்ததும் சட்டென்று உரைத்தது

கைபேசியில் அழைத்து நண்பனிடம் சொன்னேன்

"டேய்.. அவன் பேசினது கீதையும் குறளும்"

"அப்படினா ?" என்று அவன் கேட்டதும் புரிந்தது

நாம் எப்படி மயங்கி இருக்கிறோம் என்பது !!!

No comments:

Post a Comment