Sunday, February 19, 2012

சொத்து


"தந்தை நலமில்லை.. உடனே வரவும்" 


முகம் மலர கிளம்பினான்...


வரப்போகும் வரவுகளை எண்ணியபடியே...


நஞ்சையும் புஞ்சையும் அவன்  கண்முன்னே வருகையில் ...


போதையும் தூக்கமும் ஓட்டுனரின் கண்ணைக் கவ்விட...


மறுநாள் ஊரார் பேசிக் கொண்டனர் 


"அப்பா அப்பான்னு உயிரை விடுவான்.. இப்போ நெஜமாவே விட்டுட்டான்"

1 comment: